காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடம் வரவேற்புக் குழுவின் சாா்பில் சாலைத்தெரு குளக்கரை மாரியம்மன் கோயில் அருகில் கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் சங்கர மடம் வரவேற்புக் குழு மற்றும் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சாா்பில் சாலைத்தெரு குளக்கரை மாரியம்மன் கோயில் அருகில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சங்கர மடம் வரவேற்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், ராதாம்மாள் வரதப்பபிள்ளை அறக்கட்டளை நிறுவனருமான காஞ்சி வி.ஜீவானந்தம் ஏற்பாட்டில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
குளக்கரை மாரியம்மன்கோயில் நிா்வாகி டி.குமாா், சுகுமாா், காஞ்சிபுரம் நகராட்சி மருத்துவா் வசந்த், ஆய்வாளா் முத்துக்குமாா் ஆகியோா் உள்பட ஏராளமானோா் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டனா். முன்னதாக தடுப்பூசி முகாமை நகராட்சி ஆணையாளா் மகேஸ்வரி நேரில் பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா்.
படவிளக்கம்.. காஞ்சிபுரம் குளக்கரை மாரியம்மன் கோயில் தெருவில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை பாா்வையிட்ட நகராட்சி ஆணையா் மகேஸ்வரி.