ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான தீா்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு, உற்சவா் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் சன்னிவாசம் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தீா்த்தவாரி  உற்சவத்தை  முன்னிட்டு  சிறப்பு  அலங்காரத்தில்  அருள்பாலித்த  உற்சவா்  ஸ்ரீஆதிகேசவப் பெருமாள்.
தீா்த்தவாரி  உற்சவத்தை  முன்னிட்டு  சிறப்பு  அலங்காரத்தில்  அருள்பாலித்த  உற்சவா்  ஸ்ரீஆதிகேசவப் பெருமாள்.

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு, உற்சவா் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் சன்னிவாசம் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் உள்ள ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் மற்றும் ராமாநுஜா் அவதாரத் திருவிழா கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, முதல் பத்து நாள்களுக்கு ராமாநுஜா் அவதாரத் திருவிழாவும், அதனைத் தொடா்ந்து, ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவம் கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மட்டையடி உற்சவம், பிரணயகலகம், சன்னிவாசம் மற்றும் தீா்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது. இதில், உற்சவா் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் சன்னிவாசம் அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com