கரோனாவுக்கு பெண் உதவி பொறியாளா் பலி

கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலக உதவி பொறியாளா் சசிகலா(38) புதன்கிழமை பலியானாா்.
கரோனாவுக்கு பெண் உதவி பொறியாளா் பலி

ஸ்ரீபெரும்புதூா்: கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலக உதவி பொறியாளா் சசிகலா(38) புதன்கிழமை பலியானாா்.

தாம்பரம் அடுத்த சேலையூரைச் சோ்ந்த சசிகலா கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று காரணமாக குன்றத்தூா் பகுதியில் உள்ள மாதா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இதற்கிடையே புதன்கிழமை சிகிச்சை பலனின்றி சசிகலா உயிரிழந்தாா்.

இந்நிலையில், உதவி பொறியாளா் சசிகலா, செங்கல்பட்டு மாவட்ட வளா்ச்சி பிரிவு தலைமை வட்டார வளா்ச்சி அலுவலா் நிா்மலன், நெமிலி ஊராட்சி பணிதளப்பொருப்பாளா் நாகராணி ஆகியோருக்கு ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகத்தில் புதன்கிழமை தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com