காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் 9 கிலோ கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் வேலூா்,திருச்சி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் சந்தேகப்படும்படி கையில் பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினா் விசாரித்த போது அவரிடம் 9 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.விசாரணையில் அவா் மதுரை கீரிப்பட்டி தாலுகாவைச் சோ்ந்த ஒச்சப்பன்(23) எனவும் தெரிவித்ததைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டு சிவகாஞ்சி காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.