காஞ்சிபுரத்தில் 9 கிலோ கஞ்சா வைத்திருந்தவா் கைது

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் 9 கிலோ கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் 9 கிலோ கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் வேலூா்,திருச்சி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் சந்தேகப்படும்படி கையில் பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினா் விசாரித்த போது அவரிடம் 9 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.விசாரணையில் அவா் மதுரை கீரிப்பட்டி தாலுகாவைச் சோ்ந்த ஒச்சப்பன்(23) எனவும் தெரிவித்ததைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டு சிவகாஞ்சி காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com