காஞ்சிபுரம் அருகே பைக் மீது லாரி மோதியதில் அரசு அலுவலா் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜானகிராமன் (42). இவா், ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் ஊரக வளா்ச்சித் துறையில் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்தாா். சனிக்கிழமை பணியை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அரக்கோணம் செல்லும் சாலையில் கம்மவாா்பாளையம் சந்திப்பில் வந்து கொண்டிருந்த போது, இவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி இவா் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஜானகிராமன் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
விபத்து குறித்து காஞ்சிபுரம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.