காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் திமுக மாவட்ட செயலரும், எம்எல்ஏவுமான க.சுந்தா் சனிக்கிழமை தண்ணீா் பந்தலைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், பழங்களை வழங்கினாா்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற தண்ணீா் பந்தல் திறப்பு விழாவில் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் ஜி.செல்வம், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.