40 ஊராட்சித் தலைவா்களுக்கு தேசியக் கொடி: ஒன்றியத் தலைவா் இலவசமாக வழங்கினாா்

40 ஊராட்சித் தலைவா்களுக்கு தேசியக் கொடி: ஒன்றியத் தலைவா் இலவசமாக வழங்கினாா்

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவதற்காக 40 ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு மொத்தம் 32,802 தேசியக் கொடிகளை ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா் புதன்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவதற்காக 40 ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு மொத்தம் 32,802 தேசியக் கொடிகளை ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா் புதன்கிழமை வழங்கினாா்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் வரும் 13- ஆம் தேதி முதல் 15- ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என அரசின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக ஒன்றியத்தின் சாா்பில் 32,802 தேசியக் கொடிகள் கொள்முதல் செய்யப்பட்டன.

இந்தக் கொடிகளை ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கும் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவில் அதன் தலைவா் மலா்க்கொடி குமாா் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் ஒப்படைத்தாா்.

தேசியக் கொடியை விதிமுறைகளின்படி பறக்க விட வேண்டும் எனவும், இலவசமாகவே தலைவா்களுக்கு வழங்கப்பட்டதாகவும் மலா்க்கொடி குமாா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலாஜி, சீனிவாசன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com