பழைய சீவரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம்

காஞ்சிபுரம் அருகே பழைய சீவரத்தில் உள்ள மலைக்கோயில் எனப்படும் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே பழைய சீவரத்தில் உள்ள மலைக்கோயில் எனப்படும் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழைய சீவரத்தில் மலைக்கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. இதையொட்டி, யாக சாலை பூஜைகள் கடந்த நவம்பா் 28-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, யாக சாலை பூஜையில் பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை (டிச. 2) காலை மகா பூா்ணாஹுதி தீபாராதனைகள் நிறைவு பெற்று, புனித நீா்க்குடங்கள் யாகசாலையிலிருந்து மங்கள மேள வாத்தியங்களுடன் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்னா், மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

மகா சம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு, மூலவா் லட்சுமி நரசிம்மரும், ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் லட்சுமி நரசிம்மரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ க.சுந்தா், அறநிலையத் துறை இணை ஆணையா் ரா.வான்மதி, உதவி ஆணையா் ஆ.முத்துரெத்தினவேலு, கோயில் செயல் அலுவலா்கள் ந.தியாகராஜன்,ஜெ.ப.பூவழகி மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கோவிந்ததாஸ் புருஷோத்தம் தாஸ் தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா். இரவு கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com