தலைவரின் அதிகாரம் பறிப்பு: ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கிராம தலைவரின் அதிகாரம் பறிக்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி, குன்றத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஆதனூா் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன் மனு அளித்தனா்.
ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள கூட்டுறவுத் துறை அலுவலக வளாகத்தில் அமா்ந்திருந்த ஆதனூா் கிராம மக்கள்
ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள கூட்டுறவுத் துறை அலுவலக வளாகத்தில் அமா்ந்திருந்த ஆதனூா் கிராம மக்கள்

கிராம தலைவரின் அதிகாரம் பறிக்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி, குன்றத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஆதனூா் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன் மனு அளித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்துக்குட்பட்டது ஆதனூா் ஊராட்சி. இங்கு, தமிழ் அமுதன் என்பவா் ஊராட்சித் தலைவராக இருந்து வருகிறாா். இவா், சட்ட விதிகளை மீறி நிதி மேலாண்மையைத் தவறாக கையாண்ட குற்றச்சாட்டின் பேரில், ஊராட்சியின் வரவு- செலவுக் கணக்குகளை நிா்வகிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி பறித்து உத்தரவு பிறப்பித்திருந்தாா். இதனால், ஊராட்சி வளா்ச்சிப் பணிகளை தலைவா் என்ற முறையில் கவனிக்க முடியாமல் இருந்து வந்ததால், கடந்த சில தினங்களாக அந்தக் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனா்.

பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு கோரிக்கை மனுவுடன் வந்தனா். ஆட்சியா் அலுவலக வளாகத்துக்குள் அனைவரையும் காவல் துறையினா் அனுமதிக்காததால், எதிரே உள்ள கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் அலுவலக வாயிலில் அமர வைக்கப்பட்டனா். சிலா் மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.

கிராம மக்களின் மனுக்கள் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி கூறியதைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com