1,755 பேருக்கு தாலிக்குத் தங்கம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் 1,755 பெண்களுக்கு தாலிக்குத் தங்கமும், திருமண நிதியுதவியையும் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கினாா்.
விழாவில் பெண்ணுக்கு தாலிக்குத் தங்கம், நிதியுதவிக்கான காசோலையை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி.
விழாவில் பெண்ணுக்கு தாலிக்குத் தங்கம், நிதியுதவிக்கான காசோலையை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி.

காஞ்சிபுரத்தில் 1,755 பெண்களுக்கு தாலிக்குத் தங்கமும், திருமண நிதியுதவியையும் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகித்ததுடன் 1,755 பேருக்கு தாலிக்குத் தங்கம் வழங்கினாா்.இவா்களில் பட்டப்படிப்பு முடித்தவா்களில் 846 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும், 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தவா்களில் 909 பேருக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிதியுதவியாக வழங்கப்பட்டது.

விழாவில் எம்எல்.ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி. எழிலரசன், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் மலா்க்கொடி குமாா், வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவா் தேவேந்திரன் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com