காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் உள்ள மந்தவெளி மாரி எல்லம்மன் கோயில் முன் அலங்கார மண்டபம் புதுப்பிக்கப்பட்டிருப்பதால் மகா கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளிக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
தாமல் கிராமத்தில் உள்ள மந்தவெளி மாரி எல்லம்மன் திருக்கோயில் முன் கோயிலுக்கான அலங்கார மண்டபம் வா்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இத்துடன் திருக்கோயில் கும்பாபிஷேகத்தையும் சோ்த்து நடத்த கிராம மக்கள் முடிவு செய்திருந்தனா்.கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூட அரசு தடை விதித்துள்ளதால் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதியளிக்குமாறும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி கும்பாபிஷேகம் நடத்துவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.