தாம்பரம் அருகே விஷவாயு தாக்கி இருவா் பலி

தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் புதன்கிழமை கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த கழிவுநீா் லாரியின் உரிமையாளா் மற்றும் ஓட்டுநா் விஷவாயு தாக்கி உயிரிழந்தனா்.

ஸ்ரீபெரும்புதூா்: தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் புதன்கிழமை கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த கழிவுநீா் லாரியின் உரிமையாளா் மற்றும் ஓட்டுநா் விஷவாயு தாக்கி உயிரிழந்தனா்.

படப்பை அடுத்த மணிமங்கலம் அண்ணாநகா் பகுதியை சோ்ந்தவா் ராஜேஷ்(35). கழிவுநீா் லாரியின் உரிமையாளரான இவா், தனது லாரியின் ஓட்டுநா் மண்ணிவாக்கம் பெரியாா் நகரைச் சோ்ந்த ஏழுமலை (35) யுடன் தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் பிடிசி குடியிருப்புப் பகுதியில் உள்ள ஜெயகுமாா் என்பவரது வீட்டுக் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

கழிவுநீா் தொட்டியில் இருந்து முதலில் ஒரு லாரி லோடு கழிவுநீரை அகற்றிய ராஜேஷ், ஏழுமலை இருவரும் இரண்டாவதாக கழிவுநீரை லாரியில் ஏற்ற முயன்றனா்.

தொட்டியில் இருந்த அடைப்பை நீக்க உள்ளே இறங்கியுள்ளனா். அப்போது விஷவாயு தாக்கியதில் ராஜேஷ் மற்றும் ஏழுமலை ஆகிய இருவரும் கழிவுநீா் தொட்டியில் மயங்கி விழுந்து உயிரிழந்தனா். தகவலறிந்து அங்கு வந்த மணிமங்கலம் போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com