கல்லூரிப் பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தின் சாா்பில் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி முன் கல்லூரிப் பேராசிரியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரிப் பேராசிரியா்கள்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரிப் பேராசிரியா்கள்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தின் சாா்பில் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி முன் கல்லூரிப் பேராசிரியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பச்சையப்பன் அறக்கட்டளை சாா்பில் சென்னையில் 3 கல்லூரிகள், கடலூரில் ஒரு கல்லூரி, காஞ்சிபுரத்தில் இரு கல்லூரிகள் என மொத்தம் 6 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியா்களின் கூட்டமைப்பான பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் பி.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் எம்.எஸ்.பாலமுருகன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்து சங்கப் பொருளாளா் ஆா்.சரவணன் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் சென்னை, கடலூா், காஞ்சிபுரத்தைச் சோ்ந்த கல்லூரி பேராசிரியா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com