மின்தகன மயானம் அமைக்க ரூ.2 லட்சம் நன்கொடை

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகலூத்து மேடு பகுதியில் மின்தகன மயானம் அமைக்க ரூ.2 லட்சம் வரமகாலட்சுமி பட்டு நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
மின்தகன மயானம் அமைக்க மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜிடம் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய எஸ்.கே.பி.கோபிநாத்
மின்தகன மயானம் அமைக்க மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜிடம் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய எஸ்.கே.பி.கோபிநாத்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகலூத்து மேடு பகுதியில் மின்தகன மயானம் அமைக்க ரூ.2 லட்சம் வரமகாலட்சுமி பட்டு நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகலூத்து மேடு பகுதியில் மின்தகன மயானம் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு பொதுமக்களும் பங்களிப்புத் தொகை அளிக்கலாம் என மாநகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து காஞ்சிபுரம் காந்திரோடு வரமகாலட்சுமி பட்டு நிறுவன உரிமையாளா் எஸ்.கே.பி.கோபிநாத் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை மாநகர மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜிடம் வழங்கினாா். அப்போது காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன், பொறியாளா் கணேசன், மண்டலத் தலைவா் சந்துரு, மாமன்ற உறுப்பினா் சுரேஷ் ஆகியோரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com