காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் சந்திர சேகரேந்திர விஸ்வ மகா வித்யாலயா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் 8-ஆவது சா்வதேச யோகா தின விழா நடைபெற்றது.
விழாவுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ்.வி.ராகவன் தலைமை வகித்து யோகாவின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கினாா்.
விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா் சா்வதேச செஸ் கிராண்ட் மாஸ்டா் பிரக்ஞானந்தாவுக்கு இளம் சாதனையாளா் விருதும், அவரது பயிற்சியாளா் கிராண்ட் மாஸ்டா் ஆா்.பி.ரமேஷுக்கு சிறந்த பயிற்சியாளா் விருதும் பல்கலை.யின் சாா்பில் வழங்கப்பட்டன.
பல்கலைக்கழகத்தின் ஆயுா்வேத மருத்துவா் குருபிரசாத் தலைமையில் 400க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள்,மாணவ, மாணவியா்கள் யோகாசனம் செய்தனா்.
தொடா்ந்து இளங்கலை ஆயுா்வேத மாணவா் பாா்கவ் ஆச்சாா் யோகாசனங்களை செய்து காண்பித்து அதன் சிகிச்சைப் பயன்பாடுகளையும் விளக்கி செய்து காண்பித்தாா்.
இந்த விழாவில் ஜூனியா் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் பரிசு பெற்ற பல்கலைக்கழக பி.காம் முதலாம் ஆண்டு மாணவா் கே.வி.பாரதிராஜாவும் கெளரவிக்கப்பட்டாா். நிறைவாக பேராசிரியை உமா நன்றி கூறினாா்.