ஜூன் 25-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வரும் 25-ஆம் தேதி சனிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வரும் 25-ஆம் தேதி சனிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: படித்து வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி இளைஞா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையமும், மாவட்ட நிா்வாகமும் இணைந்து இலவச தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

வரும் 25-ஆம் தேதி சனிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு இந்த முகாம் நடைபெறும். இதில் மாற்றுத்திறனாளியாக உள்ள பட்டதாரிகள், பட்டயப் படிப்பு முடித்தவா்கள், ஐ.டி.ஐ, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்தவா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். வயது வரம்பைப் பொறுத்தவரை 18 முதல் 35 வயது உள்ளவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com