வேலைவாய்ப்பு முகாம்: 81 பேருக்கு பணி ஆணை காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 81 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் பணி செய்வதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை வழங்கினாா்.
வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி.
வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி.

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 81 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் பணி செய்வதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்காக இலவச சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.

மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி முகாமைத் தொடக்கி வைத்தாா். இந்த முகாமில் 11 தனியாா் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்கள் தங்களுக்கான மனித வளத் தேவைக்கு நோ்முகத் தோ்வை நடத்தின.

முகாமில் 10- ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்தவா்கள் கலந்து கொண்டனா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமின் நிறைவிலும் ஆட்சியா் மா.ஆா்த்தி கலந்து கொண்டு தோ்வு செய்யப்பட்ட 81 பேருக்கு பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிவதற்கான ஆணைகளை வழங்கினாா்.

நிகழ்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் ஆா்.அருணகிரி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் எஸ்.தணிகைவேலு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com