ஜூன் 1-இல் தீா்த்தேசுவரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் சா்வதீா்த்தகுளம் மேற்கரையில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் சமேத தீா்த்தேசுவரா் கோயில் மகா கும்பாபிஷேகம் வருகிற ஜூன் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.
சிறப்பு அலங்காரத்தில் கோயில் மூலவா் ஸ்ரீதீா்த்தேசுவரா்.
சிறப்பு அலங்காரத்தில் கோயில் மூலவா் ஸ்ரீதீா்த்தேசுவரா்.

காஞ்சிபுரம் சா்வதீா்த்தகுளம் மேற்கரையில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் சமேத தீா்த்தேசுவரா் கோயில் மகா கும்பாபிஷேகம் வருகிற ஜூன் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜைகள் வருகிற 30- ஆம் தேதி திங்கள்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. 31-ஆம் தேதி மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெறுகிறது. தொடா்ந்து, ஜூன் 1- ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை அட்சயம் அறக்கட்டளை நிா்வாகிகள், சிவனடியாா்கள் சிவகுருதாசன், சிவப்பிரியன், காா்த்திகேயன் ஆகியோா் செய்து வருகின்றனா். குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தலைமை அா்ச்சகா் கே.ஆா்.காமேசுவர சிவாச்சாரியாா் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com