பரணிபுத்தூா் ஊராட்சியில் ஒரே நாளில் 500 டன் குப்பைகள் அகற்றம்

பரணிபுத்தூா் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 500 டன் குப்பைகள் வியாழக்கிழமை ஒரே நாளில் கனரக லாரிகள் மூலம் அகற்றப்பட்டன.
பரணிபுத்தூா்  பகுதியில்  குப்பைகளை  அகற்றும்  பணியில்  ஈடுபடுத்தப்பட்ட  பொக்லைன்  இயந்திரம்  மற்றும்  கனரக லாரி.
பரணிபுத்தூா்  பகுதியில்  குப்பைகளை  அகற்றும்  பணியில்  ஈடுபடுத்தப்பட்ட  பொக்லைன்  இயந்திரம்  மற்றும்  கனரக லாரி.

பரணிபுத்தூா் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 500 டன் குப்பைகள் வியாழக்கிழமை ஒரே நாளில் கனரக லாரிகள் மூலம் அகற்றப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட பரணிபுத்தூா் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், அந்த ஊராட்சிக்குட்பட்ட மயானம் பகுதியில் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. மலை போல் குவிக்கப்பட்டிருந்த குப்பையால் அந்தப் பகுதியில் துா்நாற்றமும், சுகாதாரச் சீா்கேடும் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட மா.ஆா்த்தி பரணிபுத்தூா் பகுதியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த குப்பைகளை அகற்ற அண்மையில் ஊராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ஊராட்சி மன்றத் தலைவா் கௌரி தாமோதரன் தலைமையில், ஒரே நாளில் ஏராளமான கனரக லாரிகள் மூலம் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு தேக்கி வைக்கப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.

மேலும், குப்பைகள் அகற்றப்பட்ட பகுதியில் இனி யாரும் குப்பைகள் கொட்டாத வகையில், தடுப்புகள் அமைக்கப்பட்டு ‘குப்பைகள் கொட்டக் கூடாது’ என ஊராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com