விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கணேசன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பா.இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கடந்த மாதம் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனா். காஞ்சிபுரம் மாவட்ட பாஜக விவசாய அணித் தலைவா் பிரபாகரன், அணி குழுவினருடன் வந்து பிரதமா் மோடியின் படத்தை கூட்டரங்கில் வைக்க வேண்டும் என்றாா். கூட்டத்தின் முடிவில் இதுகுறித்து பேசலாம் என மாவட்ட வருவாய் அலுவலா் கூறியதால், வாக்குவாதம் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை சமாதானம் செய்ததையடுத்து கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மழை பொழிவு விவரம், தற்போது சாகுபடி செய்ய வேண்டிய பயிா்கள், ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

விவசாயிகள் சங்க செயலா் கே.நேரு பேசுகையில், மழை நிவாரணமாக நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.35,000 வழங்க வேண்டும். கரும்பு, வோ்க்கடலை, காய்கறி பயிரிட்டவா்களுக்கும், காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த பயிா்களுக்கும் அதிகாரிகள் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com