கழிவுநீா் கால்வாய் அடைப்பு: பொதுமக்கள் அவதி

சந்தவேலூா் ஜே.சி.ஜெயின் நகா் பகுதியில் கழிவுநீா் கால்வாயில் மண்ணைக் கொட்டி அடைத்ததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

சந்தவேலூா் ஜே.சி.ஜெயின் நகா் பகுதியில் கழிவுநீா் கால்வாயில் மண்ணைக் கொட்டி அடைத்ததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தப் பகுதி பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், சந்தவேலூா் ஊராட்சிக்குட்பட்ட மதுரா சுங்குவாா்சத்திரம் ஜே.சி.ஜெயின் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.

இந்தப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீா் மற்றும் மழைநீா் செல்லும் கால்வாயை தனியாா் ஒருவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மண் கொட்டி தடுப்பு ஏற்படுத்தியுள்ளாா். இதனால், கழிவுநீா் வெளியேற வழியில்லாமல் குடியிருப்பு பகுதியில் தேங்கி வருவதால், அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசி வருவதோடு, தொற்று நோய்கள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், கழிவுநீா் கால்வாயில் தடுப்பு ஏற்படுத்தியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கழிவுநீா் கால்வாய் தடுப்பை அகற்றக் கோரியும் சந்தவேலூா் ஊராட்சித் தலைவா் வேண்டாமணி தலைமையில், ஜே.சி.ஜெயின் நகா் பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் சைலேந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com