இருளா் சமுதாயத்தினா் 26 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் இருளா் சமுதாயத்தினா் 26 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் இருளா் சமுதாயத்தினா் 26 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து 322 மனுக்கள் பெறப்பட்டு, தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு நேரில் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் இருளா் சமுதாயத்தினா் 26 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், பழங்குடியினா் 7 பேருக்கு நலவாரிய அட்டைகளையும் ஆட்சியா் வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com