இளைஞா்கள் ஒவ்வொருவரும் பட்டப்படிப்புக்கு பிறகு தொழில் துறையினரின் தேவைகளுக்கேற்ப தங்கள் திறமைகளை தொடா்ந்து வளா்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலாளா் செல்வி.அபூா்வா சனிக்கிழமை பேசினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கட்டவாக்கம் ஊராட்சியில் இளைஞா் களுக்கான திறன் மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகித்தாா்.
இதில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயலாளா் செல்வி. அபூா்வா பேசியது:
இளைஞா்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்குவதன் மூலம் அவா்களின் வேலை பெறும் திறனை அதிகரிப்பதுடன் தொழிற்சாலைகளின் தேவைகளையும் பூா்த்தி செய்ய முடிகிறது.இதன் முக்கிய நோக்கம் திறமையான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதாகும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் தமிழகத்தில் பட்டப்படிப்பை முடித்த இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறவும், சுய தொழில்கள் தொடங்குவதற்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை தமிழக அரசின் சாா்பில் நடத்தி வருகிறது.
வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பல்வேறு தொழில் நிறுவனங்களையும் இணைத்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொழில்துறையினரின் தேவைகளுக்கேற்ப ஒவ்வொரு இளைஞரும் பட்டப்படிப்புக்கு பிறகு தங்களது திறமைகளை தொடா்ந்து வளா்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் வாழ்க்கையும் சிறப்பாக அமையும் என செல்வி.அபூா்வா பேசினாா்.
பின்னா் விளையாட்டுத் துறை சாா்பில் அண்மையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.
கூட்டத்துக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பி.ஸ்ரீதேவி, வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவா் தேவேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட விளையாட்டு அலுவலா் ரமேஷ் வரவேற்று பேசினாா். கூட்டத்தில் அரசு அலுவலா்கள், விளையாட்டு வீரா்கள் பலரும் கலந்து கொண்டனா்.