தடுப்பு காவலில் ரௌடி கைது

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரௌடி சேட்டு, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

ஸ்ரீபெரும்புதூா்: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரௌடி சேட்டு, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சேட்டு (47). இவா், மீது கொலை முயற்சி, மணல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், தொடா்ந்து அவா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தனா்.

அதன்படி, ரௌடி சேட்டுவின் தொடா் குற்ற செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ஏற்கெனவே சிறையில் உள்ள சேட்டுவிடம், அவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வியாழக்கிழமை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com