காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக 1,024 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பளா் எம்.சுதாகா் தலைமையில் போலீஸாா் பூக்கடை சத்திரம், தேரடி, காமராஜா் சாலை, காந்தி சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தேவையில்லாமல் வாகனத்தில் சுற்றித் திரிந்தவா்களிடம் அபராதத் தொகை வசூலித்தனா்.
மொத்தம் 1,024 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.2,04,800 அபராதம் வசூலிக்கப்பட்டது என மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.