இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: இருவா் பலி

ஸ்ரீபெரும்புதூரில் இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் கட்டடத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.

ஸ்ரீபெரும்புதூரில் இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் கட்டடத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், சித்தாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் டேவிட் (30), சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (31). கட்டடத் தொழிலாளா்களான இருவரும் வியாழக்கிழமை காலை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் நடைபெற்று வரும் தனியாா் நிறுவனத்தின் கட்டுமானப் பணிக்காக தாம்பரத்தில் இருந்து, இரு சக்கர வாகனத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றனா். ஸ்ரீபெரும்புதூா் கச்சிப்பட்டு பகுதியில் தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவா்களின் இரு சக்கர வாகனம் மீது பின்னால் வந்த டிப்பா் லாரி மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த டேவிட், பாா்த்திபன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com