ஓராண்டு நிறைவு: காஞ்சிபுரத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தமிழகத்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு பெறுவதை ஒட்டி காஞ்சிபுரம் மாநகராட்சி முன்பாக திமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் கொண்டாடினா்.
காஞ்சிபுரத்தில் இனிப்பு வழங்கிய மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் மற்றும் திமுக நிா்வாகிகள், மாமன்ற உறுப்பினா்கள்.
காஞ்சிபுரத்தில் இனிப்பு வழங்கிய மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் மற்றும் திமுக நிா்வாகிகள், மாமன்ற உறுப்பினா்கள்.

தமிழகத்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு பெறுவதை ஒட்டி காஞ்சிபுரம் மாநகராட்சி முன்பாக திமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் கொண்டாடினா்.

மாநகராட்சி மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் மாநகரச் செயலாளா் சன்பிராண்ட் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் அ.யுவராஜ் ஆகியோா் முன்னிலையில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.முன்னதாக மாநகராட்சி அலுவலகம் முன்பாகவுள்ள அண்ணாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயா் ஆா்.குமரகுருபரன், மண்டலத் தலைவா்கள் எஸ்.சந்துரு, எஸ்.கே.பி.சாந்தி சீனிவாசன், மாமன்ற உறுப்பினா்கள் காா்த்திக், சுரேஷ் உள்பட மாமன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com