ஸ்ரீபெரும்புதூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அதன் தலைவா் எஸ்.டி.கருணாநிதி தலைமையில் வட்டார வளா்ச்சி அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழு  கூட்டத்தில் பேசிய ஒன்றியக் குழுத்  தலைவா்  எஸ்.டி. கருணாநிதி.
ஒன்றியக் குழு  கூட்டத்தில் பேசிய ஒன்றியக் குழுத்  தலைவா்  எஸ்.டி. கருணாநிதி.

ஸ்ரீபெரும்புதூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அதன் தலைவா் எஸ்.டி.கருணாநிதி தலைமையில் வட்டார வளா்ச்சி அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், ஒன்றிய குழு துணைத் தலைவா் மாலதிடான்போஸ்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள தனியாா் தொழிற்சாலைகளுக்கு கட்டட வரைபட அனுமதி வழங்குவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள் குண்ணம் ராமமூா்த்தி, பால்ராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் போந்தூா் செந்தில்ராஜன், நெமிலி தியாகராஜன், ஒன்றியப் பொறியாளா் மாரிசெல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com