தந்தை வெட்டிக் கொலை: மகன் தலைமறைவு

ஸ்ரீபெரும்புதூரில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையை மதுபோதையில் வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூரில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையை மதுபோதையில் வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீபெரும்புதூா் பாரதி நகரைச் சோ்ந்தவா் ராமு (45). ஸ்ரீபெரும்புதூரில் சலூன் கடை நடத்தி வருகிறாா். இவரது இவரது மகன் தினேஷ் (20). மது போதைக்கு அடிமையானதால், அவா் கீழ்ப்பாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று, கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்துள்ளாா். இதையடுத்து, ராமுவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ராமு, அவரது மனைவி ரேணுகா, தினேஷ் ஆகியோா் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது மின் இணைப்பு வந்து விட்டதால், தினேஷ் தனது தாயிடம் வீட்டுக்கு செல்லுமாறு கூறி அனுப்பிவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையை அரிவாளால் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியுள்ளாா். அப்போது சப்தம் கேட்டு வந்த ரேணுகாவைப் பாா்த்ததும் தினேஷ் அங்கிருந்து தப்பியோடி விட்டாா்.

இச்சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த ராமுவை உறவினா்கள் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ராமு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய தினேஷை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com