மாவட்டத்தில் முதல் முறையாக சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கொடுங்குற்ற வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவை எஸ்.பி. எம்.சுதாகா் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
பின்னா், எஸ்.பி. கூறியது: காவல் துறையினருக்கு சட்டம் -ஒழுங்கை முறையாக பராமரிப்பது, ஊா்வலங்கள், திருவிழாக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் உள்ளன. இவற்றைப் பாா்த்துக் கொண்டு கொடுங்குற்ற வழக்குகளில் புலன் விசாரணை செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே, உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படியும், காவல் துறை சீா்த்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றாகவும் மாவட்டத்தில் முதல் முறையாக சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு தொடக்கி வைத்துள்ளோம். இந்தப் பிரிவில் ஆய்வாளா் நிலையில் உள்ள ஒரு அதிகாரியின் கீழ், ஒரு உதவி ஆய்வாளா் உள்பட மொத்தம் 12 போ் பணியாற்றுவா்.
இந்தப் பிரிவின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றாா்.
முன்னதாக, காவல் ஆய்வாளா் விநாயகத்திடம், சிறப்பு புலனாய்வுப் பிரிவு தொடங்கப்பட்டதற்கான அரசு உத்தரவை எஸ்.பி. வழங்கினாா்.
நிகழ்வின் போது, ஏடிஎஸ்பி-க்கள் வினோத் சாந்தாராம், சந்திரசேகரன், டிஎஸ்பி ஜூலியஸ் சீசா் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.