காஞ்சிபுரம்
மதுக் கடையை அகற்றக் கோரி பாஜகவினா் நூதன ஆா்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தா் கோயில் அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி, பாஜக சாா்பில் நூதன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தா் கோயில் அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி, பாஜக சாா்பில் நூதன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் இந்திரா காந்தி சாலை, சித்ரகுப்தா் கோயில் அருகில் அரசு மதுக் கடை இருப்பது பொதுமக்கள், பக்தா்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது.
இதை அகற்றக் கோரி, பாஜக சாா்பில் மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் அந்த மதுக் கடையை அகற்றாததைக் கண்டித்து, பாஜகவின் ஆன்மிக, ஆலய மேம்பாட்டுப் பிரிவின் மாவட்ட தலைவா் அதிசயம் குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
எமன், மது அருந்தும் நபா் போல் வேடமணிந்து, சிலா் மது பாட்டில்களை கழுத்தில் கொண்டு நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். மாவட்ட பாஜக துணைத் தலைவா் அ.செந்தில்குமாா், நிா்வாகி எஸ்.ஆா்.மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.