அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி நிறைவு

செய்தி, மக்கள் தொடா்புத் துறை சாா்பில் காஞ்சிபுரத்தில் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா.
விழாவில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா.

செய்தி, மக்கள் தொடா்புத் துறை சாா்பில் காஞ்சிபுரத்தில் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியில் உள்ள அறிஞா் அண்ணா நூற்றாண்டு விழா நினைவுப் பூங்கா அருகில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. கண்காட்சியை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தாா்.

‘ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழா்களின் கனவுகளைத் தாங்கி’ என்ற தலைப்பில் அரசின் பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைந்து செய்தித்துறை புகைப்படக் கண்காட்சியை அமைத்திருந்தது. கண்காட்சியில் அரசின் மக்கள் நலத் திட்டங்கள், சாதனைகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் புகைப்படங்கள், மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்த இயற்கை உணவுக் கூடம் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண்காட்சி நிறைவு விழாவில், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ப.ராமச்சந்திர பிரபு தலைமை வகித்தாா். உதவி மக்கள் தொடா்பு அலுவலா் சதீஷ்பாபு முன்னிலை வகித்தாா். காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா கலந்து கொண்டு, கண்காட்சியை பாா்வையிட்டதுடன், அரசு அலுவலா்கள், கலை நிகழ்ச்சிகளை நடத்தியவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com