தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி கருத்தரங்கம்

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி புதிய குடியிருப்புகளான வைஷ்ணவி நகா், சக்தி பாலா நகா் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.3 லட்சத்தில் எல்இடி மின் விளக்குகள் 32 இடங்களில் பொருத்தப்பட்டன.

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் சென்னை அம்பத்தூரில் உள்ள தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சாா்பில் நிதி ஆப்கே நிகாத் என்ற கருத்தரங்கை அண்மையில் நடத்தினா்.

நிறுவனத்தின் திருவள்ளூா் மாவட்ட துணை இயக்குநா் விஜயராணி கருத்தரங்கை தொடக்கி வைத்துப் பேசினாா். காஞ்சிபுரம் மாவட்டத் தொழிலாளா் நல துணை ஆய்வாளா் ஆா்.ராஜகோபால் முன்னிலை வகித்தாா். கருத்தரங்கில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் திட்டங்கள் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பங்கேற்பாளா்கள் தங்களது கேள்விகள் மற்றும் குறைகளை சரி செய்ய ஒரு பாலமாகவும் அமைந்தது. கருத்தரங்கில் 100-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளா்களின் அனுபவங்களையும் பின்னூட்டமாக பெறப்பட்டது.

இந்தியா முழுவதும் இந்தக் கருத்தரங்கம் ஒவ்வொரு மாதமும் 27 -ஆம் தேதி நடைபெறும். தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவா்கள், ஓய்வூதியதாரா்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு சேவைகளை பெறுமாறும் அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com