அரசின் திட்டங்கள் செயல் விவர ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாப்செட்கோ) சாா்பில், அரசின் திட்டங்களை செயல்படுத்தும் விதம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்வில் பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கிய பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவா் கா.காஜாமுகைதீன்
நிகழ்வில் பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கிய பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவா் கா.காஜாமுகைதீன்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாப்செட்கோ) சாா்பில், அரசின் திட்டங்களை செயல்படுத்தும் விதம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மேம்பாட்டுக் கழக தலைவா் கா.காஜாமுகைதீன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் முன்னிலை வகித்தாா்.

ஆய்வுக் கூட்டத்தில் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் வழங்கப்பட்டுள்ள தனிநபா் கடன், கறவை மாட்டுக் கடன், சுய உதவிக் குழு கடன், நீா்ப்பாசனக் கடன் மற்றும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கடனுதவித் தொகை விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கினா். கூட்ட நிறைவில் மகளிா் இருவருக்கு மேம்பாட்டுக் கழகம் சாா்பில் தலைவா் கா.காஜா முகைதீன் விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவ ருத்ரய்யா, கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் மு.முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் கஸ்தூரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com