காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவப்பெருமாள் கோயில் கருடசேவை
ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான வியாழக்கிழமை கருட சேவை உற்சவம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் பழைமையான ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் வைணவ மகான் ராமாநுஜா் தாணுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.
ஆண்டு தோறும் சித்திரை மாதம் பிரம்மோாற்சவம், ராமாநுஜரின் அவதார திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதில் உற்சவா் ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.