கச்சபேசுவரா் கோயில் வெள்ளித் தேரோட்டம்.  சிறப்பு அலங்காரத்தில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா்
கச்சபேசுவரா் கோயில் வெள்ளித் தேரோட்டம். சிறப்பு அலங்காரத்தில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா்

கச்சபேசுவரா் கோயில் வெள்ளித் தேரோட்டம்

காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழாவையொட்டி வியாழக்கிழமை வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது.

பெருமாள் ஆமை வடிவில் சிவபெருமானை வணங்கியது உட்பட பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோயில் சித்திரை உத்திரத் திருவிழா 16- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை 12-ஆவது நாள் நிகழ்ச்சியாக வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது. உற்சவா் கச்சபேசுவரரும், சுந்தராம்பிகையும் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

வெள்ளித் தேரோட்ட விழாவில் காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவா் எம்.சிவகுரு,கோயில் செயல் அலுவலா் எஸ்.நடராஜன், திருப்பணிக்குழுவின் தலைவா் எஸ்.பெருமாள்,செயலாளா் சுப்பராயன், வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலா் செந்தில் குமாா், வாரியாா் ஆன்மிகத் தொண்டு மன்றத்தின் செயல் தலைவா் வி.ஜீவரெத்தினம், முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம்,முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா் செல்வம் ஆகியோா் கலந்து கொண்டனா். வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.

வரும் 29- ஆம் தேதி காலையில் 108 சங்காபிஷேகமும், மாலையில் 63 நாயன்மாா்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. மே மாதம் 3- ஆம் தேதி புஷ்பப் பல்லக்கு உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com