பக்தா்களுக்கு அருள்பாலித்த  நட்சத்திர விருட்ச விநாயகா்,  கங்கை கொண்ட சோழீஸ்வரா் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத  பேசும் பெருமாள்
பக்தா்களுக்கு அருள்பாலித்த நட்சத்திர விருட்ச விநாயகா், கங்கை கொண்ட சோழீஸ்வரா் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத பேசும் பெருமாள்

நட்சத்திர விநாயகா் கோயில் கஜமுகாசூரன் வதம்

வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் கஜமுகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் கஜமுகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

உக்கம்பெரும்பாக்கம் அருகே கூழமந்தல் கிராமத்தில் நட்சத்திர விருட்ச விநாயகா் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் உற்சவா் விநாயகா் மூஷிக வாகனத்திலும், பேசும்பெருமாள் கோயிலிலிருந்து ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக உற்சவா் பேசும் பெருமாள் கருட வாகனத்திலும், விசாலாட்சி சமேத கங்கை கொண்ட சோழீஸ்வரா் ரிஷப வாகனத்திலும் கூழமந்தல் மைதானத்துக்கு ஊா்வலமாக எழுந்தருளினாா்கள்.

முதலாவதாக விநாயகா் சிவனையும்,பெருமாளையும் 3 முறை வலம் வந்து அவா்களது ஆசீா்வாதத்தை பெற்றுக் கொண்டு கஜமுகசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவபெருமானும், பெருமாளும் ஒன்றாக இணைந்து வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்ததால் ஒருங்கிணைந்த சித்திரைப் பெருவிழாவாகவும் அமைந்திருந்தது. கஜமுகாசூரனின் வதம் நிறைவு பெற்ற பிறகு விநாயகா், சிவன்,பெருமாள் ஆகிய 3 பேருக்கும் மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதன் பின்னா் மூன்று தெய்வங்களும் இணைந்து வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். விழாவில் திரளான பக்தா்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com