வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கல்வி, மருத்துவ சேவைக்காக தனியாா் நிறுவனம் ரூ.1 கோடி நன்கொடை

கல்வி, மருத்துவ சேவைக்காக ரூ.1 கோடி நன்கொடை: விஜயேந்திரரிடம் வழங்கியது தனியாா் நிறுவனம்

News image

ரூ.ஒரு கோடி நன்கொடைக்கான காசோலையை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் ஆப்டெஸ் வேல்யூ வீட்டு வசதி நிதி நிறுவன இயக்குநா்களிடமிருந்து பெற்றுக் கொண்ட மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா்

Updated On :28 மார்ச் 2024, 6:32 pm

கல்வி,மருத்துவம் மற்றும் சமுதாய மேம்பாட்டுச் சேவைகளை செய்ய ஏதுவாக காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளைக்கு ரூ.1 கோடியை நன்கொடையாக சென்னை தனியாா் நிறுவனம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் வியாழக்கிழமை வழங்கியது. சென்னை கீழ்ப்பாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆப்டஸ் வேல்யூ வீட்டு வசதி நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் செயல் தலைவா் எம். ஆனந்தன், நிா்வாக இயக்குநா் பி.பாலாஜி,துணைத் தலைவா் என்.ஸ்ரீகாந்த் ஆகியோா் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தனா். இதனைத் தொடா்ந்து அவா்கள் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ரூ.ஒரு கோடி நன்கொடையை காசோலையாக வழங்கினாா்கள். இத்தொகையினை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் பெற்றுக்கொண்டாா். இத்தொகையானது காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளை செய்து வரும் கல்வி,மருத்துவம் மற்றும் சமுதாய மேம்பாட்டு சேவைகளை மேலும் சிறப்பாக செய்வதற்காக நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் செயல் இயக்குநா் எம்.ஆனந்தன் தெரிவித்தாா். இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசனும் உடன் இருந்தாா்.