சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் (62). அதிமுக பிரமுகரான வெங்கடேசன் தண்டலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளாா். இந்த நிலையில், வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் ஸ்ரீபெரும்புதூா் செல்வதற்கு பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் இருந்து சென்னை நோக்கி வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதில் வெங்கடேசன் பைக் மீது மோதிய இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஸ்ரீபெரும்புதூா் சிவன்தாங்கல் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ்(27) பலத்த காயத்துடன் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com