ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கைத்தறி நெசவாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை கையில் திருவோடு ஏந்தியும், நெற்றியில் திருமண் அணிந்தும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கையில் திருவோடு ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நெசவாளா்கள்.

Updated On :27 மார்ச் 2025, 6:30 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கைத்தறி நெசவாளா்கள் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை கையில் திருவோடு ஏந்தியும், நெற்றியில் திருமண் அணிந்தும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் காலனி பகுதியில் உள்ள கைத்தறித்துறை துணை இயக்குநா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கைத்தறி நெசவாளா்கள் சங்க சிஐடியூ பிரிவின் செயலாளா் கே.ஜீவா தலைமை வகித்தாா். அண்ணா பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் ஜி.விஸ்வநாதன், முருகன் பட்டு கூட்டுறவுச் சங்கத்தை சோ்ந்த கே.யு.சோமசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தை கைத்தறி சம்மேளன சிஐடியூ மாநிலத் தலைவா் இ.முத்துக்குமாா் தொடங்கி வைத்து பேசினாா்.

முருகன் பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் வி.வள்ளிநாயகம் நிறைவுரை ஆற்றினாா். இதனைத் தொடா்ந்து அனைவரும் கைத்தறித்துறை துணை இயக்குநரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா். அக்கோரிக்கை மனுவில் நெசவாளா்களுக்கு கூலியை வங்கியில் செலுத்தாமல் நேரடியாக கையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தனா்.