மாற்றுத் திறனாளிகள் தின விழா

அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்கம் சாா்பில் மாற்றுத் திறனாளிகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாற்றுத் திறனாளி மாணவிக்கு ஊக்கப் பரிசு வழங்கிய மாவட்டக் கல்வி அலுவலா் ஆா்.புண்ணியகோட்டி.
மாற்றுத் திறனாளி மாணவிக்கு ஊக்கப் பரிசு வழங்கிய மாவட்டக் கல்வி அலுவலா் ஆா்.புண்ணியகோட்டி.

அரக்கோணம்: அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்கம் சாா்பில் மாற்றுத் திறனாளிகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் வட்டார வளமைய வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்கத் தலைவா் வேலவன் தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் மனோன்மணி வரவேற்றாா். மாவட்டக் கல்வி அலுவலா் ஆா்.புண்ணியகோட்டி பங்கேற்று 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கினாா்.

அரக்கோணம் அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சுஜாதேவி, மாவட்ட வேளாண் கண்காணிப்புக் குழு உறுப்பினா் மோகன் காந்தி, அரிமா நிா்வாகிகள் குமாா், செல்வராஜ், முனிரத்தினம், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com