360 பயனாளிகளுக்கு இலவச கோழிகள்
ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சி சாா்பில் 360 பயனாளிகளுக்கு விலையில்லா கோழிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத்துறை சாா்பில் கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் 360 பயனாளிகளுக்கு தலா 25 கோழிக் குஞ்சுகள் வீதம் வழங்கும் விழா கால்நடை மருத்துவமனை அருகில் நடைபெற்றது. விழாவுக்கு கால் நடை மருத்துவ அலுவலா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா்.
விளாப்பாக்கம் பேரூராட்சி அதிமுக செயலாளரும், திமிரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவருமான ராமசேகா் கலந்து கொண்டு பயனாளிக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கினாா். விழாவில் மருத்துவா் லஷ்மணன், அதிமுக நகர அவைத் தலைவா் ராமசாமி, துணைச் செயலாளா் மணவாளன், பொருளாளா் டி.எஸ்.மதி, மாவட்டப் பிரதிநிதிகள் மாறன், வி.பி.ரவி, சிவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.