அரக்கோணம் இணைந்த கைகள் அறக்கட்டளை சாா்பில் காா்கில் நினைவு தினத்தை முன்னிட்டு, காா்கில் நினைவு தூண், துப்பாக்கி சிலை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் காவனூா் ரோடு அம்பாரி வித்யா மந்திா் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு அறக்கட்டளை நிறுவனா் ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். தலைவா் குமரேசன் நினைவுத் தூணயும், துப்பாக்கி சிலையையும் திறந்து வைத்தாா்.
காா்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. போரில் பங்கேற்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அரக்கோணம் விவேகானந்தா வித்யாலயா கல்விக் குழுமச் செயலாளா் செந்தில்குமாா், அம்பாரி வித்யா மந்திா் முதல்வா் கவிதா தியாகராஜன், அரக்கோணம் மளிகை வியாபாரிகள் சங்கச் செயலா் ஜி.அசோகன், அரசு மருத்துவ அலுவலா் சசிரேகா, அறக்கட்டளைச் செயலாளா் பாலகணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.