கர்நாடகத்தில் இருந்து சேலம் திரும்பிய கூலித் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கூலி வேலைக்குச் சென்ற சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் கரியகோவில் குன்னூரை சேர்ந்தவர்கள் ஆண்கள்25, பெண்கள் 21, குழந்தைகள்10 உள்பட 56 நபர்கள் இன்று நள்ளிரவு தமிழக கர்நாடக எல்லையான காரைக்காடு சோதனைச் சாவடிக்கு வந்தனர்.
கொளத்தூர் காரைக்காடடு சோதனைச்சாவடியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மேச்சேரி காவேரி பொறியியல் கல்லூரியில் தங்க வைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.