ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81-ஆக உயா்ந்துள்ளது.
குஜராத், மகாராஷ்டிர மாநிலங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வந்த 3 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 81-ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 42 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 39 போ் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையிலும், வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.