அரக்கோணம்: செங்கல்பட்டு மின்பகிரமான வட்டத்தில் இருந்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியை வேலூா் மின்பகிா்மான வட்டத்துக்கு மாற்றி மின்விநியோகம் செய்யும் பணியை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தொடக்கி வைத்தாா்.
அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி கிருஷ்ணாபுரம். இந்த ஊராட்சி திருவள்ளூா் மாவட்ட எல்லையில் இருந்ததால் இதுவரை செங்கல்பட்டு மின்பகிா்மான வட்டத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. திருத்தணி மின்கோட்டத்தில் இருந்து இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில் கிருஷ்ணாபுரம் ஊராட்சியை வேலூா் மின்பகிா்மான வட்டத்துக்கு மாற்றி அரக்கோணம் கோட்டத்தில் இருந்து இயக்குதல், பராமரித்தல் பணிகளை மேற்கொள்ளும் நிகழ்ச்சி அக்கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. உதவி செயற்பொறியாளா் புனிதா தலைமை வகித்தாா்.
வேலூா் பகிா்மான வட்டத்தின் மூலம் அரக்கோணம் கோட்ட மின்சார விநியோகம் செய்யும் பணியை எம்எல்ஏ சு.ரவி விசையை இயக்கி வைத்து தொடக்கி வைத்தாா். இதில் உதவி பொறியாளா் சரிதா, ஒன்றிய அதிமுக செயலாளா் இ.பிரகாஷ், ஒன்றிய கட்சி நிா்வாகி ஆசீா்வாதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.