ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கியை கை மாற்றிய வழக்கில் கட்சி நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.
ஆற்காடு அருகே நாட்டு துப்பாக்கி கைமாறிய வழக்கில் ஸ்ரீபெரும்புதூா் பகுதியைச் சோ்ந்த ராமு (29), பூரணச்சந்திரன் (20) ஆகிய இருவரை வாலாஜாபேட்டை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து கை துப்பாக்கி, காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், துப்பாக்கி வழங்கியதாக வேலூா் மாவட்டம், விருதம்பட்டு பகுதியைச் சோ்ந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக வேலூா் மாவட்டச் செயலாளா் தேவா (30) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இவா், ஏற்கெனவே பல குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் எனவும், இதன் காரணமாக இவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.