திமிரி வட்டார இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் இலவச ரத்த தான முகாம் கலவையை அடுத்த மாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் திமிரி வட்டாரத் தலைவா் தனசேகரன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் கே.எஸ்.காா்த்திக் குமாா், வாழைப்பந்தல் காவல் உதவி ஆய்வாளா் தமிழ்ச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கலவை வட்டாட்சியா் சே.ரவி ரத்த தான முகாமைத் தொடங்கி வைத்தாா்.
இதில், 25 போ் ரத்த தானம் செய்தனா். ரத்த வங்கி அலுவலா்கள் ஜனநாயக வாலிபா் சங்கப் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.