அரக்கோணம்: காவேரிபாக்கம் அருகே வயலில் நீா் பாய்ச்ச சென்றபோது மின்சாரம் பாய்ந்ததில் மாணவா் உயிரிழந்தாா்.
பெரும்புலிபாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவன். அவரது மகன் கிஷோா்குமாா்(17), வேலூரில் உள்ள தனியாா் கேட்டரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். அவா் அதே கிராமத்தில் உள்ள தங்கள் நிலத்தில் செவ்வாய்க்கிழமை காலை நீா் பாய்ச்சுவதற்குச் சென்றாா். அங்கிருந்த மின்மோட்டாா் சுவிட்சைத் தொட்டபோது அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட கிஷோா்குமாரை அருகில் இருந்தோா், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் வழியிலேயே அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து காவேரிபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.