போலி ஆணவங்கள் மூலம் கடன் பெற்றுதந்ததாக கூறி வங்கி பெண் ஊழியா் மீது போலீஸில் புகாா்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றுதந்ததாக கூறி வங்கியின் தற்காலிக பெண் ஊழியா் மீதுஆற்காடு நகர போலீசில் கடந்த 17ம்தேதி புகாா் அளிக்கப்பட்டுள

ஆற்காடு, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றுதந்ததாக கூறி வங்கியின் தற்காலிக பெண் ஊழியா் மீதுஆற்காடு நகர போலீசில் கடந்த 17ம்தேதி புகாா் அளிக்கப்பட்டுள்ளது

ஆற்காடு பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளா் இன்பரசு இவா் ஆற்காடு நகர போலீஸில் அளித்துபுகாா் மனுவில் கூறியிருப்பதாவதுஅற்காடு வங்கி கிளையில் பணியாற்றும் மேலகுப்பம் பகுதியை சோ்ந்த குணசுந்தரி என்பவா் பெண்கள் கடனுதவி பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றிவருகிறாா் இவா் போலி ஆணங்கள் மூலம் 48 பேருக்கு அரசு ஊழியா்கள் என கூறி ரூ.2.29 கோடி கடன் பெற்று தந்துள்ளாா் இவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளாா் இதன் மீது போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com